உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் அருகே திறந்த வெளியில் படிக்கும் மாணவர்கள்

Published On 2022-10-07 11:39 GMT   |   Update On 2022-10-07 11:39 GMT
  • கரைப்புதுார் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
  • 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரைப்புதுார் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

6 முதல் 10ம் வகுப்பு வரை மொத்தம் மூன்று வகுப்பறைகள் மட்டுமே உள்ள சூழலில் இடப்பற்றாக்குறை உள்ளது. இதனால் போதிய இடம் இல்லாமல், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இரும்பு தகர ஷீட் கூரையின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: காளிநாதம்பாளையத்தில் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஒரே வளாகத்தில் அமைந்து ள்ளன. போதிய கட்டட வசதி இல்லாமல் மாணவர்கள் திறந்த வெளியில் அமர வைக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படும்நிலை உள்ளது. பள்ளிக்கு மாற்று இடத்தில் கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இடப்பற்றா க்குறையால் மாணவர்களும், ஆசிரியர்களும் தவிர்த்து வருகின்றனர். போதிய இடம் இல்லாமல் அருகிலுள்ள ஊராட்சிக்கு சொந்தமான கட்டடமும் தற்காலிகமாக கல்வி கற்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. வகுப்பறை பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிதாக கட்டடம் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News