உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மாணவ- மாணவிகள் விடுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் - கலெக்டரிடம் பொது தொழிலாளர் நல அமைப்பு மனு

Published On 2022-10-13 05:18 GMT   |   Update On 2022-10-13 05:18 GMT
  • திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை செய்ய வேண்டும்.
  • மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து பொதுதொழிலாளர் நல அமைப்பின் பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பூர் அவினாசி சாலையிலுள்ள திருமுருகன் பூண்டிபகுதியிலுள்ள விவேகானந்தா சேவாலயத்தில் பரிதாபமாக 3பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனைஅளிக்கிறது.

மேலும் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில்திருப்பூர் பகுதி முழுவதும் இயங்கி வரும் பள்ளி மாணவ -மாணவிகள்தங்கும் விடுதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

திருமுருகன் பூண்டி சம்பவங்கள் போல் மீண்டும் நடைபெறாமல்தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News