பல்லடத்தில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
- இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் முகாம்.
- காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
பல்லடம் :
பல்லடம், அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது. பல்லடம் அரசு கலைக் கல்லூரிவளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது.
இதன்படி பல்லடம் வட்டாரத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலருக்கும், மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் போஜனா, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட தொழில் மையம், உள்ளிட்டவைகளின் சார்பில், தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுகலை, ஓட்டுனர், கணினிப் பயிற்சி, துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மற்றும்சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் முகாம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இவ்வாறு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.