உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கவர்னரை நீக்க கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

Published On 2023-06-27 11:02 GMT   |   Update On 2023-06-27 11:02 GMT
  • கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை தி.மு.க.திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ். எஸ். சண்முகசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

பல்லடம்:

திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவியை நீக்க கோரி பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ். எஸ். சண்முகசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். முத்துசாமி, பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் புத்தரச்சல் பி. கே. மணி சிறப்புரையாற்றினார். கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை தி.மு.க.திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News