உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விதைகள் உயிர் - உரங்கள் விவசாயிகள் வாங்கி பயனடைய வேண்டுகோள்

Published On 2022-10-28 12:42 IST   |   Update On 2022-10-28 12:42:00 IST
  • மூலனூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.
  • உயிர் உரங்களான அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் டிவிரிடி இருப்பில் உள்ளன.

மூலனூர் :

மூலனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மூலனூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. மக்காச்சோளம்-405 கிகி. சோளம் -2.5 டன், உளுந்து 3 டன், கொள்ளு 108 கிகி, நிலக்கடலை- 2 டன், மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் டிவிரிடி இருப்பில் உள்ளன.மக்காச்சோளம் ரூ.100 மானிய விலையிலும், சோளம் ரூ.30 மானியவிலையிலும், உளுந்து ரூ.47 மானிய விலையிலும், கொள்ளு ரூ.67, நிலக்கடலை ரூ.47 மானியவிலையிலும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தேவையான உரம் மற்றும் உரங்களை வாங்கி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News