உள்ளூர் செய்திகள்

இழப்பீடு வழங்கப்பட்ட காட்சி.

விபத்தில் காலை இழந்த வாலிபருக்கு ரூ.55 லட்சம் இழப்பீடு

Published On 2023-07-08 15:56 IST   |   Update On 2023-07-08 15:56:00 IST
  • ரூ. 75 லட்சம் இழப்பீடு வழங்க மனு கொடுத்துஇருந்தார்.
  • ரூ.52.50 லட்சம் இழப்பீடாக வழங்க நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தினர் ஒப்பு கொண்டனர்.

திருப்பூர்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின் பேரிலும் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி இன்று திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்லடம் பி. வடுகபாளையம் பகுதியை சேர்ந்த சக்தி பிரவீன் (வயது 26) என்பவர் பல்லடத்தில் உள்ள தனியார் ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.கடந்த 29.5.2022 அன்று கோவை-திருச்சி ரோட்டில் சோளியப்பக்கவுண்டன்புதூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் வலது கால் துண்டானது. இதற்கு இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.தனக்கு ரூ. 75 லட்சம் இழப்பீடு வழங்க மனு செய்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு ரூ.52.50 லட்சம் இழப்பீடாக வழங்க நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தினர் ஒப்பு கொண்டதால் சமரச தீர்வு காணப்பட்டது. அதற்கான ஆணையை மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் வழங்கினர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதாடினார். காப்பீட்டு நிறுவனத்தின் வக்கீல் பாலாஜி கிருஷ்ணன் உடன் இருந்தார். மேலும் நீதிபதிகள் செல்லத்துரை, கண்ணன், ரஞ்சித் குமார் மற்றும் வக்கீல் சங்க தலைவர் ரகுபதி, பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News