உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க கோரிக்கை

Published On 2023-04-06 07:06 GMT   |   Update On 2023-04-06 07:06 GMT
  • உடுமலை ரெயில் நிலையம் வழியாக கோவை, திருச்செந்தூர், திருவனந்தபுரம், சென்னை ஆகிய ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • கோடை காலத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை :

திண்டுக்கல் - பாலக்காடு வழித்தடம் அகல ெரயில்பாதையாக மாற்றப்பட்டு 2015ல் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் மின்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படு த்தப்பட்டது.தற்போது உடுமலை ரெயில் நிலையம் வழியாக கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்தூர், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாதத்துடன், பள்ளிதேர்வுகள் முடிவடைய உள்ளன. கோடை விடுமுறை துவங்கி யவுடன் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில்களை அதிக அளவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது செல்லும் ெரெயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.

எனவே கோடை காலத்தில் தென்மாவட்டங்க ளுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News