உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அனைத்து தாலுகாவில் பொதுவினியோக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது

Published On 2023-04-07 07:52 GMT   |   Update On 2023-04-07 07:52 GMT
  • காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் ஈட்டிவீரம்பாளையம் கிராமத்துக்கு முட்டியங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் தாலுகாவில் கிளாங்குண்டல் கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் கீரனூர் கிராமத்துக்கும், மடத்துக்குளம் தாலுகாவில் ராமேகவுண்டன்புதூர் கிராமத்துக்கும், பல்லடம் தாலுகாவில் கே.அய்யம்பாளையம் கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

இதுபோல் திருப்பூர் வடக்கு தாலுகாவில் செட்டிப்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்துக்கும், உடுமலை தாலுகாவில் தும்பலப்பட்டி கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் செங்கப்பள்ளி கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வருவாய் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற மனுக்களை பதிவு செய்யலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News