உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் : தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்

Published On 2022-07-02 11:34 GMT   |   Update On 2022-07-02 11:34 GMT
  • திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
  • 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 -ந்தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆ லோசனை நடைபெற்றது.

திருப்பூர் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள்கூட்டம் திருப்பூரில் உள்ளஅலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டதலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் அப்துல் ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 -ந்தேதி திருச்சியில் நடக்கும்மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும், 15வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில்இயங்கி வரும் பள்ளிவாசலை மூட முயற்சிக்கும் காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டிப்பதுடன், சிறுபான்மையினரின் வழிபாட்டுஉரிமையை தமிழக அரசுபாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

Tags:    

Similar News