உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

புளி விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கவலை

Published On 2023-04-26 04:57 GMT   |   Update On 2023-04-26 04:57 GMT
  • தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது.
  • புளி கிலோ 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர்.

உடுமலை :

உடுமலை சுற்றுப்பகுதிகளில் தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது. கோடை காலம் துவங்கியதும் புளியம் பழங்கள் அறுவடையை மேற்கொள்கின்றனர். ரோட்டோரத்திலுள்ள மரங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் தரிசு நிலங்களிலுள்ள மரங்களில் புளியம்பழம் பறிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரும் ஏலம் விடுகின்றனர்.

இவ்வாறு பறிக்கப்படும் புளியம்பழங்களில் இருந்த ஓடு மற்றும் விதைகளை பிரித்து சுத்தியலில் தட்டி மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றனர்.தளி பகுதியில் இப்பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபடுகின்றனர். இந்தாண்டு அறுவடை முடிந்துள்ள நிலையில் புளியின் விலை சரிந்துள்ளது.

இது குறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், வழக்கமாக, புளி கிலோவுக்கு 100 ரூபாய் வரை விலை கிடைக்கும். தற்போது 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர். பிற மாநில வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை குறைந்துள்ளது என்றனர்.

Tags:    

Similar News