உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் நாளை மின்தடை

Published On 2022-10-26 07:46 GMT   |   Update On 2022-10-26 07:46 GMT
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.
  • திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

திருப்பூர் :

தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிசாலை, புஷ்பா தியேட்டர், காலேஜ் சாலை, ஓடக்காடு, பங்களா பஸ் நிறுத்தம், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ. லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், பூத்தார்நகர், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி.தியேட்டர் பகுதி, ஆசர்நகர், நாராயணசாமிநகர், காந்திநகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, ஜீவாகாலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்காரவேலர் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News