உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வீரபாண்டி பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-08-10 15:20 IST   |   Update On 2023-08-10 15:20:00 IST
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.
  • துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 11-ந்தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தந்தை பெரியார்நகர் மற்றும் முருகம்பாளையம் மின் பாதைகளில் மின் வினியோகம் தடைபடும்.

இதனால் முருகம்பாளையம், பாரக்காடு, சூரியநகர்,கோடீஸ்வரா நகர், கருவேலங்காடு, சிவசக்திநகர், தந்தை பெரியார் நகர், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என்று திருப்பூர் மின் செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News