உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
- துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
உடுமலை:
உடுமலையை அடுத்த பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 7-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: வடுகபாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, சுங்காரமுடக்கு, வேலப்பநாயக்கன்புதூா், குடிமங்கலம், சனுப்பட்டி, முத்துசமுத்திரம், லிங்கமநாயக்கன்புதூா் கொள்ளுபாளையம் மற்றும் பத்ரகாளிபுதூா்.