உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

திருப்பூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-22 10:39 GMT   |   Update On 2022-09-22 10:40 GMT
  • தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
  • மத்திய அரசிற்கு எதிரான கண்டன கோசங்களை எழுப்பினர்.

 திருப்பூர் :

தமிழகம் முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் மாநில நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதனை கண்டித்து திருப்பூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்ட தலைவர் ஹபீபூர் ரஹ்மான் தலைமையில் காங்கயம் சாலையில் உள்ள சி.டி.சி. டிப்போ அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசிற்கு எதிரான கண்டன கோசங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ.மாவட்ட தலைவர் பஷீர் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News