உள்ளூர் செய்திகள்
கை குழந்தைகளுடன் பிச்சை எடுத்த பெண்களிடம் போலீசார் விசாரணை
- கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பிற்கு புகார்கள் வந்ததன.
- பல்லடம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் நால்ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக, சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பிற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பல்லடம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் மகளிர் போலீசார் நால்ரோடு பகுதியில் கைக்குழந்தைகளுடன் இருந்த கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி , ரோசன்பாய் ஆகிய 2 பெண்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.