உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம்

Published On 2022-08-10 07:27 GMT   |   Update On 2022-08-10 07:27 GMT
  • 33-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது.
  • 36 ஆயிரத்து, 700 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் 33-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது. இதில் 29 ஆயிரத்து 600 பூஸ்டர் தடுப்பூசி உட்பட 36 ஆயிரத்து, 700 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இதற்கான பணியில் மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுகாதாரத்துறையினர் கூறுகையில், முந்தைய முகாமை ஒப்பிடுகையில் 33-வது முகாமில் கூடுதலாக 14 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்ட மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கிறது என்றனர்.

Tags:    

Similar News