பஸ் நிறுத்தம் அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் பயணிகள் அவதி
- கோயமுத்தூர், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலை போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏற வேண்டும்.
- பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது.
வீரபாண்டி :
திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் கோயமுத்தூர், பல்லடம்,பொள்ளாச்சி, உடுமலை ,பொங்கலூர். போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் நின்றுதான் பேருந்து ஏற வேண்டும்.
ஆனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் எப்பொழுதும் மழைநீரும் சாக்கடை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் பேருந்துக்கு நிற்கும் பயணிகள் துர்நாற்றம் வீசும் இந்த நீரில்தான் நிற்க வேண்டியுள்ளது. மேலும் பேருந்து ஏறுவதற்கு இந்த கழிவு நீரின் வழியாகத்தான் பேருந்தில் ஏற வேண்டும். இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.