உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்

Published On 2023-11-10 10:04 GMT   |   Update On 2023-11-10 10:04 GMT
  • திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டும்.
  • பஸ் நிலையம், கடைவீதி போன்ற இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81- ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டும். இந்த நிலையில், நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால், மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து சென்ற வண்ணம் உள்ளது.

இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு போக்குவரத்து போலீசார் காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை, காமநாயக்கன்பாளையம் வழியாகவும், மங்கலம் வழியாகவும், செல்ல அறிவுறுத்தி வருகிறார்கள்.

போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை சமாளித்து வருகிறார்கள். மேலும் பல்லடம் நகரின் முக்கியமான பகுதிகளான பஸ் நிலையம், கடைவீதி போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Tags:    

Similar News