உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவிலில் மொபட் மோதி முதியவர் சாவு

Published On 2023-06-03 07:59 GMT   |   Update On 2023-06-03 07:59 GMT
  • குப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வெள்ளகோவில் :

மூலனூர் அருகே உள்ள கிழாங்குண்டல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (வயது 70) என்பவர் நேற்று வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகில் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மொபட் மோதிவிட்டது.

இதனால் குப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் குப்புசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குப்புசாமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News