உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2023-10-29 11:51 GMT   |   Update On 2023-10-29 11:51 GMT
  • புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் முத்துவேலை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
  • சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரடிவாவிபுதூர் கிராமத்தை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரது மகன் முத்துவேல் (வயது 20). டிரைவர். இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் முத்துவேலை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News