உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

முத்தூர் அருகே லாட்டரி சீட்டு டோக்கன் வைத்திருந்தவர் கைது

Published On 2023-10-29 16:18 IST   |   Update On 2023-10-29 16:18:00 IST
  • முத்துமங்களம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.
  • அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கான எண்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

முத்தூர்:

முத்தூர் அருகே முத்துமங்களம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முத்துமங்களம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர். இதில் முத்தூர் ந.கரையூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன்(வயது 55) என்பவர் லாட்டரி சீட்டுகளின் நம்பர்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கான எண்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News