உள்ளூர் செய்திகள்
உலக மக்கள்  தொகை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம். 

வெள்ளகோவிலில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு கூட்டம்

Published On 2022-07-19 06:31 GMT   |   Update On 2022-07-19 12:46 GMT
  • கை கழுவுவது, கையை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி எடுத்து கூறினார்.
  • வட்டார சுகாதார ஆய்வாளர் கதிரவன், பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புனித அமல அன்னை உயர்நிலைப்பள்ளி, வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பது, கை கழுவுவது, கையை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி எடுத்து கூறினார்.

இதில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர் கதிரவன், மற்றும் பள்ளி ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News