உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பெண்கள் பள்ளி மைதானத்தில் நடைபயிற்சிக்கு அனுமதிக்க கூடாது - மேலாண்மைக்குழு மனு

Published On 2022-12-28 09:14 IST   |   Update On 2022-12-28 09:15:00 IST
  • பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடுவதற்கு அனுமதிக்குமாறு சிலர் வந்து கேட்டனர்.
  • நடைபயிற்சி, கால்பந்து விளையாடுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்று தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்:

அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில், பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடுவதற்கு அனுமதிக்குமாறு சிலர் வந்து கேட்டனர். பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி கால்பந்து விளையாடுவதற்கு பள்ளி மைதானத்தில் அனுமதிக்க முடியாது என்று பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து வாக்குவாதம் செய்தனர். எனவே நடைபயிற்சி, கால்பந்து விளையாடுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது' என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News