உள்ளூர் செய்திகள்
மழைநீரால் நிரம்பிய  ராசாத்தாகோவில் குட்டை.

தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் ராசாத்தாகோவில் குட்டை

Published On 2022-10-30 06:48 GMT   |   Update On 2022-10-30 06:48 GMT
  • மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
  • ட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

அனுப்பர்பாளையம்:

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையம் ராசாதாத்தா கோவில் அருகே வருவாய்துறைக்கு சொந்தமான குட்டை உள்ளது. இந்த குட்டையின் பரப்பளவு 4.82 ஏக்கராகும். கடந்த 2 மாதமாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை பெய்ததன் பயனாக ராசாத்தா கோவில் குட்டை பாதி அளவு மழைநீரால் நிரம்பி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் குட்டையை சுற்றி பச்சை பசேலென மரங்கள் பசுமையாக அமைந்துள்ளது. ஆனால் குட்டையின் உள்புறமும், வெளிபுறமும் அதிக அளவில் சீைமக்கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெரிய அளவிலான குளம், குட்டைகள் இல்லாத நிலையில் 4 ஏக்கர் பரப்பளவிலான குட்டையை பராமரித்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய திட்டமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News