உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

விவசாய பணிக்கு 100 நாள் திட்ட பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம் - விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு

Published On 2022-09-23 07:44 GMT   |   Update On 2022-09-23 07:44 GMT
  • சிறு, குறு விவசாயிகள் இதுகுறித்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
  • விவசாய பணிகள் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு, பல்லடம் தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது

பல்லடம்:

100 நாள் திட்ட பணியாளர்களை பயன்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு, பல்லடம் தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மோகனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்லடம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. தென்னை மரங்களை சுற்றி வட்டப்பாத்தி அமைத்தல், வரப்பு போடுதல் மற்றும் ஏரி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்பணிகளை மேற்கொள்ள விரும்பும் சிறு, குறு விவசாயிகள் இதுகுறித்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு சிறு, குறு விவசாயி சான்று, கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நகல் வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு போட்டோக்கள் ஆகியவற்றுடன் பல்லடம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News