வெள்ளகோவில்-காங்கயம் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
- அதனால் பாதுகாப்பு நலன் கருதி நீரளவு குறையும் வரை மோட்டார் இயக்கம் நிறுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- வெள்ளகோவில் நகராட்சி பொதுமக்கள் நிலைமை சீராகும் வரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வெள்ளக்கோவில்:
வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி மற்றும் ஆணையாளர் ஆர்.மோகன்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றை ஆதாரமாகக்கொண்டு இயங்கும் முத்தூர், காங்கயம் குடிநீர் திட்டம் இயக்கப்படும் தலைமை நீரேற்றம் செய்யும் நிலையங்களை சுற்றி வெள்ள அளவு அதிகமாக உள்ளது. அதனால் பாதுகாப்பு நலன் கருதி நீரளவு குறையும் வரை மோட்டார் இயக்கம் நிறுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பயன் பெறும் 6 பேரூராட்சி. 3 நகராட்சி மற்றும் 1,790 ஊரக குடியிருப்புகளுக்கு நிலைமை சீராகும் வரை குடிநீர் வினியோகம் இருக்காது என்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.எனவே வெள்ளகோவில் நகராட்சி பொதுமக்கள் நிலைமை சீராகும் வரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்–பட்–டுள்–ளது.