உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பூஸ்டர் தடுப்பூசி - திருப்பூர் மாவட்டத்தில் தகுதி பெற்றவர்கள் 11,65,444 பேர்

Published On 2022-07-20 05:17 GMT   |   Update On 2022-07-20 05:17 GMT
  • பூஸ்டர் கடந்த 15ந் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
  • பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது உட்பட்டவர்களுக்கு முதல் தவணை 87 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 63 சதவீதம் பேருக்கும், 15 முதல் 18 வயது உட்பட்டவர்களுக்கு முதல் தவணை 87 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 74 சதவீதம் பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை 98 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 76 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் கடந்த 15ந் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் தவணை செலுத்தி 6மாதங்கள் அல்லது 26 வாரங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.இந்த தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் இலவசமாக அடுத்த செப்டம்பர் 30-ந் தேதி வரை செலுத்தப்படும்.

இது குறித்து, கலெக்டர் வினீத் கூறியதாவது:-

மாவட்டத்தில் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் ஆன, 10 லட்சத்து 14 ஆயிரத்து 495 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை செலுத்திய ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து 949 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 65 ஆயிரத்து 444 பேர் உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News