உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ. 10 ஆயிரத்தை மீட்டு போலீசில் ஒப்படைத்த விவசாயிக்கு பாராட்டு

Published On 2022-11-17 06:41 GMT   |   Update On 2022-11-17 06:41 GMT
  • ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது.
  • விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் நெருப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையத்தை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 43). விவசாயி. இவர் அங்குள்ள கனரா வங்கி ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம்., சென்டரில் 500 ரூபாய் நோட்டுகளாக 10 ஆயிரம் ரூபாய் கிடந்துள்ளது. அதனை எடுத்த அவர் திருமுருகன் பூண்டி போலீசில் ஒப்படைத்தார்.விவசாயி வரதராஜனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் யாருடையது என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News