உள்ளூர் செய்திகள்
வார இறுதி நாட்களில் கூடுதலாக 35 பஸ்கள் இயக்கம்
- திருப்பூரில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதலாக 35 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
- பயணிகள் இந்த பேருந்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் இருந்து வார இறுதி நாட்களில் கூடுதலாக 35 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூா் மண்டல பொது மேலாளா் மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருப்பூரில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், சேலம் ஆகிய ஊா்களுக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக 35 அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆகவே, பயணிகள் இந்த பேருந்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.