உள்ளூர் செய்திகள்

நகை - பணம் பறிப்பில் கைதானவர்களை படத்தில் காணலாம். 

திருப்பூரில் போலீஸ் போல் நடித்து பெண்களிடம் நகை, பணம் பறித்தவர்கள் சிறையில் அடைப்பு

Published On 2023-10-18 07:08 GMT   |   Update On 2023-10-18 07:08 GMT
  • குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
  • அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 1பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் என்று கூறி 3 பேர் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்து நகை, பணத்தை மிரட்டி பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த ஜெயராம் (வயது 47), கோவை அண்ணா நகரை சேர்ந்த அய்யப்பன் (51), ஆறுமுகம் (47) ஆகிய 3 பேரை பிடித்தனர். இவர்கள் தனியாக வசிக்கும் பெண்களை குறி வைத்து போலீசார் போல் நடித்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்து

சென்றது தெரிய வந்தது. கஞ்சா வழக்கு போடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். ஆறுமுகம் போலீஸ் போல் போலியான அடையாள அட்டை மற்றும் காக்கி சீருடை வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 1பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News