உள்ளூர் செய்திகள்

உடுமலை சைனிக் பள்ளி புதிய முதல்வர் பொறுப்பேற்பு

Published On 2023-05-03 07:18 GMT   |   Update On 2023-05-03 07:18 GMT
  • மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது உடுமலை சைனிக் பள்ளி.
  • முதல்வராக பதவியேற்ற கேப்டன் கே.மணிகண்டனுக்கு 11-ம்வகுப்பு கேடட்கள் மற்றும் பள்ளி இசைக் குழுவினரால் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

உடுமலை:

இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணையை பின்னணியாகக் கொண்டு உடுமலை சைனிக் பள்ளி அமைந்து உள்ளது.மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியில் உருவாகி பாதுகாப்புத் துறையில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்தப் பள்ளியின் புதிய முதல்வராக கேப்டன் கே.மணிகண்டன் பொறுப்பேற்றார்.

சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர் 2005 -ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்தார். 2010 ல் லாங் என்.டி படிப்பையும், 2017-ல் வெல்லிங்டனில் பட்டமும் பெற்றார்.மணிகண்டன் இதற்கு முன்பு சில்காவில் கல்வி அதிகாரியாகவும் வெலிங்டன் மற்றும் இந்திய கடற்படை அகாடமி அதிகா ரியாகவும் பணியாற்றி உள்ளார். முதல்வராக பதவியேற்ற கேப்டன் கே.மணிகண்டனுக்கு 11-ம்வகுப்பு கேடட்கள் மற்றும் பள்ளி இசைக் குழுவினரால் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News