உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடம் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-05-18 13:10 IST   |   Update On 2023-05-18 13:10:00 IST
  • தோட்டம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் இருந்த வேப்ப மரத்தில், சண்முகம் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
  • லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54) விவசாயி. இந்த நிலையில் நேற்று காலை வீடு அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன் லட்சுமணன், தந்தையைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது இவர்களின் தோட்டம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் இருந்த வேப்ப மரத்தில், சண்முகம் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சண்முகத்தின் மகன் லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News