உள்ளூர் செய்திகள்
ஜல்லிக்கற்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
- லட்சுமி நகர் லே-அவுட் பகுதியில் சுமார் 50வீடுகள் உள்ளன.
- வீதியில் ஜல்லிகற்கள் போடப்பட்டு சுமார் 6 மாதங்கள் ஆகின்றன.
வீரபாண்டி :
திருப்பூர் மாநகராட்சி 53 வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி நகர் லே-அவுட் பகுதியில் சுமார் 50வீடுகள் உள்ளன. இங்கு 3 வீதிகள் உள்ளன. 2வது மற்றும் 3வது வீதிகளில் தார் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வீதியில் ஜல்லிகற்கள் போடப்பட்டு சுமார் 6 மாதங்கள் ஆகின்றன. தார் சாலை போடப்படவில்லை.இதனால் தினந்தோறும் இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து 53வது வார்டு உறுப்பினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.