உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூரில் மெர்ச்சண்டைசிங் தொழில் பயிற்சி 27-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-11-25 09:05 IST   |   Update On 2023-11-25 09:05:00 IST
  • இந்த மையம் அமைக்கப்பட்டு ஆடை உற்பத்தி, தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது
  • உற்பத்தியை அதிகரிக்க மட்டுமில்லாமல் திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது.

திருப்பூர் :

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில், திறமையான மனிதவளத்தை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல இடங்களில் இந்த மையம் அமைக்கப்பட்டு ஆடை உற்பத்தி, தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவை தொழில்துறைக்கு அதிக உற்பத்தி மேலாண்மை மற்றும் மேற்பார்வை திறனை வழங்குகிறது. தொழில் துறையினருக்கு உற்பத்தியை அதிகரிக்க மட்டுமில்லாமல் திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சிலுடன் இணைந்து திருப்பூர் மண்டலத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சியை வழங்கி வருகிறது. சிறப்பு தையல் எந்திர ஆபரேட்டர், மெர்ச்சண்டைசிங் பயிற்சி வகுப்புகள் திருப்பூரில் ஆயிரம் பேருக்கு வழங்க உள்ளனர். இந்த பயிற்சி திட்டத்தின் தொடக்கவிழா வருகிற 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக கலையரங்கத்தில் நடக்கிறது. இதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்குகிறார். ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். விழாவில் முதல் குழுவில் படிக்க தேர்வான பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News