உள்ளூர் செய்திகள்
குர்லா எக்ஸ்பிரஸ் 21 நாட்கள் ஓசூருக்கு தாமதமாக செல்லும்
- தர்மபுரி - ஓசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடக்கிறது.
- தினமும் மதியம் 2:05க்கு ஓசூர் அடையும் குர்லா எக்ஸ்பிரஸ் தாமதமாக செல்லும்
திருப்பூர் :
கோவை- மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் 21 நாட்களுக்கு ஓசூர் செல்ல தாமதமாகும் என சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
தர்மபுரி - ஓசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கோவையில் இருந்து திருப்பூர் வழியாக செல்லும் லோகமான்யதிலக்(மும்பை) குர்லா எக்ஸ்பிரஸ் நாளை 29-ந் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 1, 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29ந்தேதிகள், நவம்பர் மாதம், 1, 3, 5, 8, 10, 12 ஆகிய தேதிகளில் 21 நாட்கள் ஓசூர் அருகே ராயக்கோட்டை - கீழமங்கலம் இடையே ஏதேனும் ஒரு இடத்தில் 40 நிமிடம் நிறுத்தி வைக்கப்படும். இதனால் வழக்கமாக தினமும் மதியம் 2:05க்கு ஓசூர் அடையும் குர்லா எக்ஸ்பிரஸ் இந்த நாட்களில் தாமதமாக செல்லும் என சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.