உள்ளூர் செய்திகள்

கே.என்.விஜயகுமார்.எம்.எல்.ஏ.,  கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்த காட்சி.

புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜையை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

Published On 2023-03-11 08:10 GMT   |   Update On 2023-03-11 08:10 GMT
  • ஒடுக்கு மெட்டல் சாலையை ஈரடுக்கு மெட்டல் சாலையாக மாற்றி அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட நாதம்பாளையம் பாத விநாயகர் கோவில் அருகில் இருந்து சமத்துவபுரம் வரை ஒடுக்கு மெட்டல் சாலையை ஈரடுக்கு மெட்டல் சாலையாக மாற்றி அமைப்பதற்கான புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை இன்று நடந்தது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் கலந்துகொண்டு பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள், ஒன்றிய தலைவர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன், ஒன்றிய தலைவர் ஐஸ்வர்யா மகாராஜா, பாசறை செயலாளர் சந்திரசேகர், துணைச் செயலாளர் முருகேசன், கூட்டுறவு சங்க தலைவர் மேக்கனம் பழனிச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News