உள்ளூர் செய்திகள்

கஞ்சாவுடன் கேரள வாலிபர் கைது செய்யப்பட்ட காட்சி.

ரெயிலில் கஞ்சா கடத்த முயன்ற கேரள வாலிபர் கைது

Published On 2022-08-20 10:34 GMT   |   Update On 2022-08-20 10:34 GMT
  • சேலம்-திருப்பூர் இடையே ரெயில்வே போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
  • 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பூர் :

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் சேலம்-திருப்பூர் இடையே ரெயில்வே போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பெட்டியில் பயணம் செய்த திருப்பூர் குட்டிக்காட்டு புரம் பரம்பில் ஹவுஸ் பகுதியை சேர்ந்த நித்தின் (வயது 21) என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர் 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் திருப்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News