உள்ளூர் செய்திகள்

நீதிபதி சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்த காட்சி.

ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நீதிபதி

Published On 2022-09-30 07:11 GMT   |   Update On 2022-09-30 07:11 GMT
  • இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
  • பல்லடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பல்லடம் :

பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் பல்லடம் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த வாகன பேரணியை பல்லடம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இருசக்கர வாகன பேரணி பல்லடம் நீதிமன்றத்தின் முன்பு துவங்கி கடைவீதி, கோவை- திருச்சி மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளின் வழியாக நடைபெற்றது. இந்த வாகன பேரணியின் போது ரோட்டில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடம் நீதிபதி சித்ரா, துண்டு பிரசுரங்களை வழங்கி ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறினார்.இதில் நீதிமன்ற ஊழியர்கள்,வழக்கறிஞர்கள்,போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News