உள்ளூர் செய்திகள்

வாகனங்கள் நிலை குறித்த ஆய்வு நடைபெற்ற காட்சி.

திருப்பூர் மாநகர போலீசாரின் ரோந்து வாகனங்கள் ஆய்வு

Published On 2022-10-13 05:57 GMT   |   Update On 2022-10-13 05:57 GMT
  • 47 இரு சக்கர ரோந்து வாகனங்களும், 55 நான்கு சக்கர ரோந்து வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • ரோந்து வாகனங்கள் இயக்கப்பட வேண்டிய முறை குறித்து காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருப்பூர் :

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் குற்றச்சம்பவங்கள் நிகழாமலிருக்க மாநகரப் பகுதியில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மாநகர போலீஸ் நிலையத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களின் ரோந்து வாகனங்கள் நிலை குறித்த ஆய்வு நடைபெற்றது.

காவல் நிலைய ரோந்து வாகனங்களின் நிலை குறித்து மாநகர காவல் தலைமையிடத்து துணை ஆணையர் பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் 47 இரு சக்கர ரோந்து வாகனங்களும், 55 நான்கு சக்கர ரோந்து வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரோந்து வாகனங்கள் இயக்கப்பட வேண்டிய முறை குறித்து காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News