உள்ளூர் செய்திகள்

திறப்பு விழா நடைபெற்ற காட்சி.

பல்லடம் அருகே சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா

Published On 2023-04-05 10:43 GMT   |   Update On 2023-04-05 10:43 GMT
  • 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
  • ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருந்ததால், சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் பல்லடம் திமுக. கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், அதிமுக., இளைஞரணி துணைச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமை ஆசிரியை விஜயராணி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News