உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடம் அருகே கணவன், மனைவி தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2022-11-27 06:49 GMT   |   Update On 2022-11-27 06:49 GMT
  • கணவன்-மனைவி இருவரும் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
  • பல்லடம தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பல்லடம் :

பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 61). இவரது மனைவி தமிழரசி (50). இவர்கள் மகன்சம்பத்குமார்(35) மற்றும் மருமகள் கலையரசி (30) ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மகன் சம்பத்குமார் திருப்பூர் சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது வீடு தாழிடப்பட்டிருந்தது. வெகு நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது சம்பத்குமாரின் தந்தை வேலுச்சாமி மற்றும் தாயார் தமிழரசி ஆகியோர் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை திறந்து மயங்கி கிடந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் மருத்துவர் பரிசோதனை செய்தபோது வேலுச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தமிழரசிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவர்களது மகன் சம்பத்குமார் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News