உள்ளூர் செய்திகள்

வரைபடம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

தோட்டக்கலை துறை மாணவிகள் களப்பயிற்சி

Published On 2023-02-09 07:02 GMT   |   Update On 2023-02-09 07:02 GMT
  • 10 பேர் கொண்ட குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
  • தங்கள் தேவைகளை அறிந்து கொள்ள உதவுவதாக உள்ளது என மாணவிகள் தெரிவித்தனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே பொங்கலூரில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலைத்துறை சார்ந்த மாணவிகள் தோட்டக்கலை அனுபவ பயிற்சியின் ஒரு பகுதியாக கிராமப்புறத்தில் சமூக வரைபடம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாணவி மௌனிகா தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த சமூக வரைபடம் என்பது அந்த பகுதி மக்களையே ஈடுபடுத்தி அவர்களே தங்கள் பகுதியை பற்றி தெரிந்து,தங்கள் தேவைகளை அறிந்து கொள்ள உதவுவதாக உள்ளது என மாணவிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News