வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம்
- 2ஆயிரத்து 395கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- ஒரு கிலோ நிலக்கடலை காய் ரூ.75.80க்கு கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை, வெள்ளிக்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை,நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று வெள்ளிக்கிழமை விவசாயிகள் கலந்து கொண்டு 2ஆயிரத்து 395கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ நிலக்கடலை காய் ரூ.75.80க்கு கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.1லட்சத்து 81 ஆயிரத்து 578க்கு வணிகம் நடைபெற்றது.இத்தகவலை வெள்ளகோவில் ஒழு ங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.