உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி. 

பொங்கலூர் ஒன்றிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Published On 2022-09-24 06:08 GMT   |   Update On 2022-09-24 06:08 GMT
  • நான்கு பள்ளிகளுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • 806 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு, கொடுவாய், கேத்தனூர் மற்றும் பொ.வெ.க அரசு உதவி பெறும் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், கேத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ஹரி கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன், மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். விழாவின்போது மொத்தம் 806 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பிரியா புருஷோத்தமன் ,லோகு பிரசாந்த் மற்றும் உகாயனூர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News