உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஊக்கத்தொகை பெற ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் விவசாயிகள்

Published On 2022-08-11 08:29 GMT   |   Update On 2022-08-11 08:29 GMT
  • பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
  • நில விபரம் 'அப்டேட்' செய்யப்படுகிறது.

அவினாசி

பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் வழங்கி பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் அவர்களின் நில விபரம் 'அப்டேட்' செய்யப்படுகிறது. தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே வரும் நாட்களில் கவுரவ ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற நிலையில் அவிநாசி வட்டாரத்தில் 67 சதவீத விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை அப்டேட் செய்துள்ளனர்.அடுத்த ஊக்கத்தொகை பெற விரைவில் தங்கள் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News