உள்ளூர் செய்திகள்
உடுமலையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 16-ந் தேதி நடக்கிறது
- உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
- காலை 11 மணியளவில் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
உடுமலை :
உடுமலை வருவாய் கோட்டத்தில் உள்ள உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு உடுமலை ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.