உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கோழிக்கொண்டை பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் கவலை

Published On 2022-07-29 07:57 GMT   |   Update On 2022-07-29 07:57 GMT
  • திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மாலைகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
  • மாலை கட்ட கோழி கொண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

திருப்பூர் :

கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மாலைகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. மாலை கட்ட கோழி கொண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கோழி கொண்டை பூக்களுக்கு விற்பனை இல்லாததால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.அதன்பின் நிலைமை சீரடைந்தது. தற்போது ரோஜா பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால் கோழி கொண்டை பூவிற்கான தேவைகுறைந்து விலை சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், கிலோ 60 ரூபாய்க்கு விற்ற கோழி கொண்டை 35 ரூபாயாக சரிந்து விட்டது. தற்பொழுது ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.ரோஜாவை வைத்து மாலை கட்டும் போது 3நாட்கள் வரை வாடாமல் இருக்கும். எனவே கோழிகொண்டைக்கான தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News