உள்ளூர் செய்திகள்

மங்கலத்தில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

Published On 2022-12-21 05:56 GMT   |   Update On 2022-12-21 05:56 GMT
  • இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • இந்துஸ்தான் சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்தார்.

மங்கலம்  :

பா.ஜ.௧. மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மங்கலம் வந்தார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளித்தனர் . இந்துஸ்தான் சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்தார்.

இதனைத்தொடர்ந்து பா.ஜ.௧.கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். கட்சியின் மாநில செயலாளர் மலர்கொடி, மாநில நிர்வாகி ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன், , இந்து மக்கள் கூட்டமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் சி.பி.சுப்பிரமணியம், பொருளாளர் கோபிநடராஜமூர்த்தி, துணைச்செயலாளர் மோகன்குமார் , இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளான ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, மகேந்திரன், கோகுல் சுப்பிரமணியம், சுவாமிடெக்ஸ், ஈஸ்வரன் ,அமிர்தம் டெக்ஸ் ஈஸ்வரன்,ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தராஜ் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் எம்.ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்து மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News