உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி கூட்டத்தில் பேசிய காட்சி.

திருப்பூரில் அ.ம.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியல் ஆலோசனை கூட்டம்

Published On 2022-11-09 07:12 GMT   |   Update On 2022-11-09 07:12 GMT
  • திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • கூட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அ.ம.மு.க. மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர் புல்லட் ரவி, தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் இறை வெங்கடேஷ், தொழிற்சங்க பேரவை தலைவர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் சுகம் வீர.கந்தசாமி, ராஜாங்கம், ஜெகதீஷ், நூல்கடை சிவக்குமார், நெருப்பெரிச்சல் பகுதி நிர்வாகி கருப்புசாமி, பாண்டியன்நகர் பகுதி இணை செயலாளர் ஷீபா பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்று கட்சிகளில் இருந்து 35 பேர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

Tags:    

Similar News