உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பி.ஏ.பி., திட்டக்குழு தலைவர் -உறுப்பினர் தேர்தல் உடுமலையில் நாளை நடக்கிறது

Published On 2023-07-31 06:03 GMT   |   Update On 2023-07-31 06:03 GMT
  • பி.ஏ.பி., திருமூர்த்தி பாசனத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 330 ெஹக்டர் (3.77 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
  • ஓட்டுப்பதிவு முடிந்ததும உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

திருப்பூர்:

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி., திருமூர்த்தி பாசனத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 330 ெஹக்டர் (3.77 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசனம் பெறுகின்றன.மொத்தம் 134 பாசன சங்கம், 9 பகிர்மான குழு தலைவர், 45 பகிர்மான குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்களுக்கான தேர்தல் நடந்த நிலையில், திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை 1ந் தேதி நடத்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை 1-ந்தேதி நடக்கிறது. திட்டக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட காலை 8:30 மணி முதல் 9:30 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் காலை 10 மணிக்குள் வெளியிடப்படுகிறது.

காலை 10:30 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல், காலை, 10:45 மணிக்கு வேட்பாளர்களின் இறுதிபட்டியல் வெளியிடப்படும். காலை 11:30 முதல் மதியம் 12:15 மணி வரை தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு பின் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அன்று மதியம் நடக்கிறது. உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுக்களை மதியம் 1:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை தாக்கல் செய்யலாம்.மனுக்கள் கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுதல் மாலை 3 மணிக்குள் நடைபெறும்.மாலை, 3:30 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம்.

வேட்பாளர்கள் இறுதி பட்டியல் மாலை 3:45 மணிக்கு வெளியிடப்படும். மாலை 4:30 மணி முதல் 5:15 மணிக்குள் தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

பி.ஏ.பி., திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக உடுமலை கால்வாய் பகிர்மான குழு, பரம்பிக்குளம் பிரதான கால்வாய் பகிர்மான குழுக்களின் தலைவர்கள், அசல் தேர்தல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என்றனர்.   

Tags:    

Similar News